No results found

    4 வழிச்சாலையில் திடீர் தீ விபத்து


    மதுரை வாடிப்பட்டி 4 வழிச்சாலை நடுவில் சிமெண்டால் தடுப்பு அமைக்கப்பட்டு அரளிப்பூ செடிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வளர்க்கப் பட்டு வருகிறது. அதனை தண்ணீர் விட்டு பராமரிக்கா ததால் காய்ந்து சருகாக காணப்படுகிறது. இந்த நிலையில் குலசேகரன்கோட்டை பிரிவு அருகே 4 வழிச்சாலை தடுப்பில் காய்ந்த அரளிப்பூ செடிகள் திடீரென தீப்பி டித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவியது. இதனால் 4 வழிச்சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال